இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.
இந்தத் தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணா தன்வீர் கொண்டு வந்தார். தீர்மானத்தில், எல்லைப் பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு விதிமீறலாகும். மேலும் கோபத்தைத் தூண்டும் செயலாகும்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கடுமையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தியாவுடான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும். ஒரு முடிவு தெரியும் வகையிலான நடவடிக்கையை நாம் எடுத்தாக வேண்டும்.
மேலும் இந்தியத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ கேப்டன் சர்பிராஸ் கானுக்கும் தீர்மானத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசையும், ராணுவத்தையும் இந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வாரமும் கூட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டனர். இந்த நிலையில் மீண்டும் தீர்மானம் போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications