For Daily Alerts
Just In
அப்பாடா! சற்றே சரிவில் இருந்து மீண்ட ரூபாய் மதிப்பு!!
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6 நாட்களாக பெரும் சரிவைக் கண்டது. இதுவரையில் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் ரூபாய் மதிப்பு 65ஐயும் தாண்டியது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பீதி அடைய வேண்டியதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்ததுடன் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று உறுதி அளித்திருந்தார். ரிசர்வ் வங்கி சார்பிலும் சில உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்றை வர்த்தகத்தின் போது இந்திய ரூபாய் மதிப்பு சற்றே ஆறுதல் தரும் வகையில் சரிவில் இருந்து மெதுமெதுவாக மீண்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு 63.35 ஆக இருந்தது.
Comments
English summary
The Indian rupee rose 2.1 percent to 63.20 against a dollar Friday, the biggest gain in nearly a year after the central bank intervened in the markets.
Story first published: Saturday, August 24, 2013, 14:03 [IST]