டெல்லியில் மைனர் சிறுமியை கடத்தி பலாத்காரம்… 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 15 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் பலாத்காரம் செய்யப்பட்டு நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெட்கக் கேடான சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனை பகுதியில் இருந்து சர்தர்பூர் பகுதிக்கு அந்த சிறுமியை கடத்திச் சென்ற மூன்று பேர் அவளை பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த சிறுமியின் சகோதரிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதை பார்த்துவிட்டு போன சிறுமி மாயமாகியுள்ளார். இந்த நிலையில் அவளை வாடகை ஆட்டோவில் கடத்திய நபர்களின் ஒருவன் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மற்ற இருவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் பலாத்கார சம்பவங்கள் தலைநகரிலும், முக்கிய நகரங்களிலும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+