For Quick Alerts
For Daily Alerts
Just In
நம்பகத்தன்மைதான் ஊடகங்களின் சொத்து: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஊடக மையம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், அண்மைக்காலமாக ஊடகத்துறை பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றும் ஊடகங்கள் இந்தியாவின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன.
நாட்டின் பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது. ஊடகங்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கைதான் அவற்றின் மிகப் பெரிய சொத்து. சமூக மாற்றங்களை, நிகழ்வுகளை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியும் கூட ஊடகங்கள்தான்.
புலனாய்வு என்ற பெயரில் பொய்யான தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இப்போது சமூக வலைதளங்கள் விஸ்வரூபமெடுத்துவிட்ட நிலையில் அவதூறு பிரசாரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம் என்றார்.
Comments
English summary
Credibility is currency, when it comes to the media, and a witch hunt cannot substitute investigative journalism, Prime Minister Manmohan Singh said Saturday
Story first published: Saturday, August 24, 2013, 13:28 [IST]