பெண் பலாத்காரம்: சிங்கப்பூர் வாழ் இந்தியர்க்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை- 12 பிரம்படி!!
கோலாலம்பூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோலாலம்பூரின் உட்லண்டஸ் அடுக்குமாடி கார் நிறுத்தில் 16 வயது இளம் பெண் தனது நண்பருடன் மிக நெருக்கமாக இருந்ததை பார்த்தார் இந்தியாவைச் சேர்ந்த சிவகுமார் செல்வராஜ்.
விமான தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வரும் சிவகுமார், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் இருவரையும் மிரட்டியதுடன் இளம் பெண்ணை தம்முடன் அழைத்துச் சென்று கட்டாய உறவு கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அந்தப் பெண் தொடர்ந்து வழக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சூ கான் டெக்,சிவக்குமாருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்தார்.