மும்பை பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil

லோக்சபாவில் மும்பை பலாத்கார சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் நடத்தி தீர்ப்பு வழங்க மகாராஷ்டிரா அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த நாட்டின் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று வருகின்றனர். மற்றொ புறமோ பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். டெல்லி பலாத்கார சம்பவத்தில் பலியான பெண்ணுக்கே இன்னமும் நீதி கிடைக்காதது வருத்தத்துக்குரியது..
இத்தகைய பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். வெறும் வார்த்தைகளை சொல்லி பயனில்லை.. செயல்தான் முக்கியம் என்றார்.












Click it and Unblock the Notifications