For Daily Alerts
Just In
மும்பை பலாத்கார வழக்கு.. விரைவு நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்க நடவடிக்கை: ஷிண்டே
லோக்சபாவில் மும்பை பலாத்கார சம்பவம் தொடர்பாக இன்று அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சுஷில்குமார் ஷிண்டே, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த ஆண் ஊழியர் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது சய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் என்எம் ஜோஷி மார்க் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து விரைவாக தீர்ப்பை வழங்குமாறு மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்,
இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
Comments
English summary
Home Minister Sushil Kumar Shinde on Monday made a statement in the Lok Sabha on the Mumbai gangrape case assuring that the Maharashtra government will do its best to complete the investigation as soon as possible.
Story first published: Monday, August 26, 2013, 13:05 [IST]