மார்ச் மாதத்திற்குள் 47 புதிய கிளைகள் - மெர்க்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 336வது புதிய கிளை நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டது. விழாவு்க்கு வங்கியின் வணிக வளர்த்து துறை துணை பொது மேலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். நெல்லை மண்டல மேலாளர் சந்திரசாமி வரவேற்றார். புதிய கிளை ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருணா முரளிதரன் திறந்து வைத்தார். டாக்டர் ஜெயா பொன்ராஜ் குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் விழாவில் குணசேகரன் பேசுகையில், மக்களின் சேமிப்பு கணக்கிற்கு 5 சதவீத வட்டியும், டெபாசிட் தொகைக்கு கூடுதலான வட்டியும் டிஎம்பி தருகிறது. மக்கள் தங்கள் டெபாசிட் பணத்தை எப்போது வேண்டுமானாலும் கணக்கை முடித்து வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களின் வசதிக்காக பல டெபாசிட் திட்டங்கள் எங்கள் வங்கியில் உள்ளன. இதை பெற கிளை மேலாளர்களை அணுகலாம்.
டெபாசிட் திட்டத்துடன் இன்சூரன்ஸ் திட்டமும், பலவகையான கடன் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாத இறுதிக்குள் டிஎம்பி 47 புதிய கிளைகளை திறந்து சாதனை படைக்க உள்ளது என்றார் அவர்.