மியான்மர் .. மோரேவில் மணிப்பூர் ஆளுநர்- தமிழ் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை!
இம்பால்: மணிப்பூர் எல்லையில் தமிழர் கோயில் உள்ளிட்ட இந்திய கிராமங்களை மியான்மர் ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அஸ்வனி குமார் என்று எல்லைப் பகுதியான மோரே நகருக்கு சென்று தமிழ்ச் சங்கப் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூர் எல்லையான மோரே நகரத்தைச் சுற்றிய இந்திய கிராமங்களில் முகாம்களை அமைக்க, எல்லை வேலிகளை அமைக்க மியான்மர் ராணுவம் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு அங்கு முகாமிட்டிருக்கும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இந்திய அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோரேயில் மணிப்பூர் ஆளுநர்
மோரே நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள பிரம்மாண்ட தமிழர் கோயில்தான் வடகிழக்கு மாநிலங்களிலேயே 2வது மிகப் பெரிய கோயிலும் ஆகும். இந்த கோயில் நிலமும் கூட ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆவணத்தின்படி தங்களுக்கு உரியது என்கிறது மியான்மர் ராணுவம்.
இந்த நிலையில் பதற்றம் நீடித்து வரும் மோரே நகரம் மற்றும் சுற்றியுள்ள எல்லை கிராமங்களைப் பார்வையிடுவதற்காக மணிப்பூர் மாநில ஆளுநர் அஸ்வனிகுமார் இன்று தரைவழியாக சென்றடைந்தார்.

மோரே நகரில் ஆலோசனை
மோரே நகரில் தமிழ் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், குக்கி இன பிரதிநிதிகள், அனைத்து இன அபிவிருத்தி குழுவினர் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அஸ்வனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

தமிழ் சங்கத்தினர் விவரிப்ப
மோரே தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செயலாளர் கே.பி.எஸ். மணியம், இணை செயலர் கே. சுப்பிரமணியன், நிதிச் செயலர் காஜா மொய்தீன் ஆகியோர் ஆளுநர் அஸ்வனிகுமாருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஏற்கெனவே தமிழர் கோயில் நிலத்தை மியான்மர் ராணுவம் எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும் அவர்கள் விவரித்தனர்.

ஒருங்கிணைந்த செக்போஸ்ட
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு சர்ச்சைக்குரிய வேலிகள் அகற்றும் பணியையும் இந்தியா-மியான்மர் இணைந்து உருவாக்கும் ஒருங்கிணைந்த செக்போஸ்ட் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications