தமிழக பொறியியல் கல்லூரிக் குவியலில் மேலும் 24 கல்லூரிகள் சேர்ந்தன!
டெல்லி: தமிழகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையி்ல் புதிதாக 24 பொறியியல் கல்லூரிகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தத் தகவலை அத்துறை அமைச்சர் சசி தரூர் ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.
இந்தக் கல்லூரிகள் அனைத்துக்கும் 2013-14ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தடுக்கி விழுந்தால் என்ஜீனியரிங் கல்லூரி
தமிழகத்தில் புற்றீசல் போல தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பெருகி விட்டன. எங்கு பார்த்தாலும் கல்லூரிகளாகவே இருக்கிறது.
சோளக்காட்டு பொம்மை போல
சென்னை நகரைச் சுற்றிலும் சோளக்காட்டு பொம்மைகளை நிறுத்தி வைத்திதருப்பது போல ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகள் குவிந்து கிடக்கின்றன.
மொத்தம் 498 கல்லூரிகள்
தமிழகத்தில் தற்போது 498 பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக கணக்கு ஒன்று கூறுகிறு.
புதிதாக 24
இந்த நிலையில்தான் புதிதாக 24 பொறியியல் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.