நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சியில் சீக்கியர் ஒருவரை கொள்ளையர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
நியூஜெர்சியில் எரிவாயு நிலையம் ஒன்றில் 40 வயதான சுரீந்தர் சிங் என்ற சீக்கியர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இதை தடுக்க முயன்றதால் சுரீந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டோர் குறித்து தகவல் தெரிவித்தால் 8 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உள்ளூர் போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் வட அமெரிக்க பஞ்சாபியர் சங்கம், அமெரிக்காவில் வாழும் சீக்கியர் சமூகத்தினருக்கும் அவர்களது சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்க போலீசார் தவறிவிட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications