ரூபாய் மதிப்பு சரிவை பலாத்காரத்துடன் ஒப்பிட்டு ட்விட் செய்த சேட்டன் பகத்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தொடரும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை பலாத்காரத்துடன் ஒப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் நாவலாசிரியர் சேட்டன் பகத் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
வரலாறு காணாத வகையில் நேற்று ரூபாய் மதிப்பு சரிந்து போனது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், "என்னை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை இல்லையா என்று ரூபாய் கேள்வி கேட்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

அவ்வளவுதான் ட்விட்டர்வாசிகள் கொந்தளித்துப் போய்விட்டனர்.. மும்பை பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலாத்காரத்தை மையமாக வைத்து ஜோக்குகளை எப்படி வெளியிடலாம் என்று சரமாரியாக பதிலடிகள் வர வேறுவழியின்றி சேட்டன் பகத் தமது பதிவை டெலீட் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.












Click it and Unblock the Notifications