தமிழகத்தில் நெருக்கடி நிலை… திமுகவை துணைக்கு அழைக்கும் பாமக
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அதனை எதிர்த்து தமிழகத்திலே ஜனநாயகத்திலே அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தகவலை தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications