மும்பை கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் மீது கோர்ட்டுக்கு வெளியே முட்டைவீச்சு
மும்பை: பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளிகள் மீது மக்கள் முட்டைகளை வீசினர்.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரை அந்த 5 பேரும் கட்டி வைத்து அடித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த வழக்கில் அந்த 5 பேரும் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் அந்த 5 பேரையும் பார்த்தபோது கடுப்பாகினர். இதையடுத்து அவர்கள் அந்த 5 பேர் மீதும் முட்டைகளை வீசித் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications