யாசின் பட்கல் கைதுக்கு சமாஜ்வாடி எதிர்ப்பு- இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுவதாக புகார்!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக், யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா? அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா? என்பது பற்றி விளக்கம் வேண்டும்.
அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications