Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேபாள எல்லையில் சிக்கிய யாசின் பட்கல் சென்னை போலீசிடம் இருந்து தப்பியவன்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய- நேபாள எல்லையில் சிக்கிய இந்திய முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பதுங்கியிருந்து போலீசிடம் சிக்காமல் தப்பியவன் என தெரியவந்துள்ளது.

இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. 2010ஆம் ஆண்டு புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு, 2011ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு என பல சம்பவங்களில் யாசின் பட்கல் தேடப்பட்டு வந்தான்.

Yasin Bhatkal

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியான சேலையூரில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருந்தான். இதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறை, டெல்லி போலீஸ், சென்னை போலீஸ் என ஒருங்கிணைந்து சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் யாசின் பட்கல் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிவிட்டான். இது சென்னை போலீசாருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

தற்போது சிக்கியிருக்கும் யாசின் பட்கலிடம் கர்நாடகா, குஜராத் மாநில அரசுகள் விசாரணையை நடத்த முடிவு செய்திருப்பது போல் சென்னை போலீசாரும் அவனை விசாரிக்கக் கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Indian Mujahideen co-founder Yasin Bhatkal, arrested on Thursday from the Indo-Nepal border in north Bihar after being on the run for more than five years, gave police the slip in Chennai less than two years ago.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+