For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிகையாளர்கள் மீது அஸரம் பாபு ஆதரவாளர்கள் தாக்குதல்!

By Shankar
Google Oneindia Tamil News

ஜோத்பூர்: ஜோத்புரில் உள்ள அஸரம் பாபு ஆசிரமத்துக்கு வந்த பத்திரிக்கையாளர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பத்திரிக்கையாளர் படுகாயம் அடைந்துள்ளார்.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஸரம் பாபு மீது புகார் எழுந்துள்ளது. காவல்துறை விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் அஸரம் பாபு அசைவதாக இல்லை. உடல் நிலையை காரணம் காட்டி அவர் இன்று டிமிக்கி கொடுத்துவிட்டார்.

Asaram Bapu supporters attack journalists

போலீசார் அவரிடம் வேண்டுமென்றே மென்மையாக நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது ராஜஸ்தான் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் இந்த அஸரம் பாபு.

இந்த நிலையில், செய்தி சேகரிக்க அஸரம் ஆசிரமத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

English summary
The supporters of Asaram Bapu have attacked the journalists those came ot the Ashram today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X