ஆண்மையுடன்தான் இருக்கிறார் அஸராம் பாபு: டாக்டர்கள் சர்ட்டிபிகேட்

Subscribe to Oneindia Tamil

ஜோத்பூர்: பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அஸராம் பாபு முழு ஆண்மைத் தன்மையுடன் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (75) உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.

Asaram Bapu, 75, passes potency test

பலாத்கார புகார் கூறிய பெண்ணுக்கு துஷ்ட ஆவிகளின் பாதிப்பு இருப்பதால், அவரை ஜோத்பூரில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மணாலியில் உள்ள ஹரி ஓம் ஆசிரமத்துக்கு அழைத்து வரும்படி பெண்ணின் தந்தையிடம் அஸராம் பாபு கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மணாலி ஆசிரமத்தில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று தனியறையில் வைத்து அஸராம் பாபு பலாத்காரம் செய்துவிட்டார் என்று அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

சம்பவத்தன்று, ஆசாராம் பாபு தன்னிடம் எப்படியெல்லாம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பதை பாதிக்கப்பட்ட மாணவி விளக்கி கூறினார். அருகிலிருந்த அஸராம் பாபு அந்த பெண் கூறியதை எல்லாம் திடமாக மறுத்தார்.

இதனையடுத்து, ஆசாராம் பாபுவை ஆண்மை சோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவர் முழு ஆண்மைத் தன்மையுடன் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே, பலாத்கார புகார் கூறிய பெண்ணிடம் அவர் தவறான முறையில் நடந்து கொண்டிருக்கலாம் என்பதை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஆசாராம் பாபுவின் விசாரணை காவல் இன்று மாலையுடன் முடிகிறது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து, விசாரணை காவலை நீட்டிக்கும்படி போலீசார் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+