மும்பையில் அக்கிரமம்... 4 வயது சிறுமி பலாத்காரம் - காமுகன் கைது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே மும்பையில்தான் பெண் பத்திரிக்கையாளர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் 4 வயது சிறுமியை சீரழித்துள்ள செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது.
ஒஷிவாரா பகுதியில், ஒரு 4 வயது சிறுமியை ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு காமுகன் பலாத்காரம் செய்துள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள். அவளது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications