அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கிய ஆன்மீகத் தொண்டர்கள்
சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்தும் பணியில் 5000 ஆன்மீகத் தொண்டர்கள் களம் இறங்கி பணியாற்றினர்.
செனனையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இந்த சேவை நடந்தது.
சுவாமி விவேகானந்தரின்150வது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில்
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவ மனைகளில் தூய்மை பணி நடந்தன.

சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேயர் சைதை துரைசாமி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

பங்காரு அடிகளார் மகன் அன்பழகன்
ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழகன் தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

வார்டுகள் சுத்தம்
அரசு பொது மருத்துவமனையில் 2000 பேர் காலை முதல் மாலை வரை இந்த பணியை செய்தனர். குழாய் விளக்கு அதாவது டியூப் லைட்கள், மின் விசிறிகள், ஜன்னல் கம்பிகள், வார்டுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும், வளாகத்தையும் தூய்மைப்படுத்தினார்கள்.

குப்பைகள் அகற்றம்
ஆண்-பெண் தொண்டர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனை முழுவதும் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றினார்கள்.

திருப்பூரில் குளம் தூர்வாறும் பணி
இதற்கிடையே, திருப்பூர் மங்கலம் சாலையில் அமைந்துள்ள ஆண்டிபாளையம் குளம் தூர் பணி காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இப்பணியில் திருப்பூர் பகுதியில் உள்ள பல்வேறு தொண்டு அமைப்புகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்கள்.

அனைத்து மதத்தினரும் கை கோர்த்த அற்புதம்
மதம், இனம், சாதிகளை மறந்து ஒட்டுமொத்த திருப்பூர் மக்களும் சந்தித்த திருவிழாவாகவும் இருந்தது. மக்களும்,தொண்டு அமைப்புகளும் மிக ஆர்வமாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட தொண்டு அமைப்புகளும்,பொதுகலந்து கொண்டார்கள்.

டீ, பிஸ்கட் விநியோகம்
கலந்து கொண்டு குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேனீர்,மோர், பிஸ்கட், காலை உணவு, சர்பத் என பல பொருட்களை இலவசமாக கொடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார்கள்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications