உழவன் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில் சோகம்: திமுக தொண்டர் மரணம்
Subscribe to Oneindia Tamil

தஞ்சையில் நேற்று நடைபெற்ற விழாவில், புதிய ரயில் சேவையை திமுக எம்.பி பழனி மாணிக்கம் மற்றும் மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. மேடையை யார் ஆக்கிரமிப்பது என்பதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அதிமுக., வினர் திமுக வினரின் கொடிகளை தள்ளி விட்டு மேடை மீதும், ரயிலின் மீதும் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் 1 மணி நேரம் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரு கட்சி தொண்டர்களும் கைகளில் கொடியுடன் கோஷங்களை எழுப்பினர். அப்போது, ரயில் மீது ஏறி நின்ற திமுக தொண்டர் ராஜா என்பவர் கீழே விழுந்து உயிரிழந்தார்












Click it and Unblock the Notifications