அமைதியாக நடந்து முடிந்த பூலித்தேவன் 298வது பிறந்த நாள்..

1755களில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக குரல் கொடுத்த மன்னர்தான் பூலித்தேவன். இங்கிலாந்து ராஜ்ஜியத்திற்கு ஒரு குன்றுமணி நெல் கூட வரியாக கொடுக்க மாட்டேன் என்று முழங்கியவர் பூலித்தேவன்.
செப்டம்பர் 1ம் தேதி பூலித்தேவன் பிறந்த நாளாகும். முன்பெல்லாம் மிகவும் அமைதியான முறையில் இந்தப் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் இதில் அரசியல் புகு்து விட்டது. கடந்த 10 வருடங்களாக பூலித்தேவன் வாரிசுகள், சமூக நல அமைப்புகள், பல்வேறு தரப்பினர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பூலித்தேவனுக்கு மாலை மரியாதை செலுத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 1ம் தேதி காலை பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி தலைமையில் பெண்கள் பால்குடமெடுத்து வந்து அரண்மனையில் உள்ள பூலித்தேவனின் சிலைக்கு மாலை மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பூலித்தேவன் மக்கள் இயக்க சார்பாக பூசைத்துரை, தேவரின் இளம் புலிகள் ராஜா மறவன், பசும்பொன் தேசிய கழகம் சார்பில் வெள்ளத்துரை உட்பட பல்வேறு அமைப்பினர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதாரி தலைமையில் பாதுகாப்பிற்காக பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications