ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆச்சரியம்!!
ஜோத்பூர்: மருந்து கொடுக்காமல்தான் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது 'வீரியம்' பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவருக்கு 3 டாக்டர்கள் கொண்ட குழு ஆண்மைப் பரிசோதனையை நடத்தியது.
முதல் டெஸ்ட்டிலேயே ஆசாராம் பாஸ்...
அவருக்கு முதலில் உடல் தூண்டுதல் physical stimulation பரிசோதனை செய்யப்பட்டது. அதிலேயே அவருக்கு உறுப்பு எழுச்சி சிறப்பாக இருந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
என்ன வேணும்னாலும் பண்ணிக்குங்க
முதலில் பரிசோதனைக்கு ஆசாராம் மறுத்தாராம். ஆனால் டாக்டர்கள் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தனராம். பின்னர் எனது உடல் கல் போன்றது. அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சோதனைக்கு சம்மதித்தாராம் ஆசாராம்.
2 மணி நேர சோதனை
ஆசாராம் பாபுவுக்கு 2 மணி நேரம் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டதாம். ஜோத்பூர் மதுரா தாஸ் மாத்தூர் மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் கொண்ட குழு இந்த சோதனையை நடத்தியது.
உடல் பாகங்களைத் தொட்டு சோதனை
முதலில் அவரது அந்தரங்க உறுப்பைத் தொட்டு அதன் மூலம் அவரது உணர்ச்சி மற்றும் எழுச்சி ஆராயப்பட்டதாம்.அந்த சோதனையிலேயே அவருக்கு நல்ல உறுப்பு எழுச்சி இருந்ததாகவும், அவரது ஆண்மைத்திறன் தெளிவாக தெரிய வந்ததாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படவில்லையாம்.
மருந்து கொடுக்காமலேயே ஆசாராம் பாபுவுக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டதும், அதில் அவரது ஆண்மைத் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதாம் காவல்துறைக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளதாம்.