For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் கற்பழிப்பு... இன்னொரு தாத்தா சாமியார் கைது!

Google Oneindia Tamil News

செஹோர், மத்தியப் பிரதேசம்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிக்கிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இன்னொரு சாமியார் பலாத்கார சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆசாராம் பாபுவுக்கு 72 வயதாகிறது. இப்போது புதிதாக கைதாகியுள்ள சாமியார் இவரை விட இளையவர்தான். அதாவது 65 வயதாகிறது.

இவரது பெயர் மகேந்திர கிரி என்கிற துன்னு பாபா. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் கிராமத்தில் ஆசிரமம் வைத்துள்ளார். அந்த ஆசிரமத்திற்கு வந்த 24 வயதுப் பெண்ணை அங்கு அடைத்து வைத்து பல மாதங்களாக இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் கிளம்பியது.

அந்த 24 வயதான மணமான பெண்ணை தனது ஆசிரமத்தில் கடந்த 4 மாதங்களாக இவர் அடைத்து வைத்திருந்தாராம். அங்கு வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம்.

இதுகுறித்து போலிஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆசிரமத்திற்குச் சென்று ரெய்டு நடத்தி அந்தப் பெண்ணை மீட்டனர். சாமியாரும் கைது செய்யப்பட்டார்.

English summary
A 65-year-old self-styled godman was arrested on charges of illegally confining a 24-year-old married woman at his ashram and raping her for over four months at a village here, police said today. The case comes close on the heels of self-styled godman Asaram Bapu allegedly raping a 16-year-old girl. Mahendra Giri alias Tunnu Baba was arrested yesterday after police raided his ashram at Neelkhand village in the district and rescued the woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X