ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆய்வு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி நேற்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரோந்து பணி முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் 5 பேரை ஆகஸ்ட் 6-ந் தேதியன்று இலக்கு வைத்து பாகிஸ்தான் படுகொலை செய்ததைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கோட்டி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கயானி நேற்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். அங்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சந்தித்து களநிலவரத்தைக் கேட்டறிந்தார்.
இப்பகுதியில் இந்திய- பாகிஸ்தான் துருப்புகளிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications