காவிரியில் புதிய தடுப்பணை விவகாரம்- லோக்சபாவில் அமளி!!

லோக்சபாவில் இந்த விவகாரத்தை அதிமுக எம்.பி. தம்பிதுரை கிளப்பினார். அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை காவிரி ஆற்றுப்படுகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என கர்நாடக அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். கர்நாடக மாநில அரசு புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
அப்போது கர்நாடகா எம்.பிக்கள் எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பினர். தம்பிதுரையைத் தொடர்ந்து திமுகவின் டி.ஆர்.பாலுவும் கர்நாடகாவின் புதிய திட்டங்களால் காவிரி டெல்டா பாசன மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று புகார் தெரிவித்தார்.
இதற்கும் கர்நாடகா எம்.பிக்கள் கூட்டமாக எழுந்து அவையின் மையப் பகுதியில் நின்று கொண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பினர். தமிழக எம்.பிக்களும் பதில் முழக்கங்களை எழுப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications