ஜெர்மன் பேக்கரி வழக்கு: தூக்கு விதிக்கப்பட்ட ஹிமாயத்துக்கு தொடர்பில்லை- பட்கல் திடுக் தகவல்
டெல்லி: புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தாமே பொறுப்பு என்றும் இதில் தூக்கு விதிக்கப்பட்ட ஹிமாயத் பெய்க்கு தொடர்பில்லை என்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் திடுக்கிடும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர் 5 பேர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் படு காயமடைந்தனர். இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியரான மிர்ஸா ஹிமாயத் பெய்க் கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் நேபாள எல்லையில் சிக்கிய யாசின் பட்கலிடம் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் புனே ஜெர்மன் பேக்கரி வழக்குக்கு தாமே பொறுப்பு என்றும் இதில் தூக்கு விதிக்கப்பட்ட பெய்க்குக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஃபயாஸ் காஸ்கிம, அபு ஜிண்டால் ஆகியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை பட்கல் கூறியுள்ளார்.

அத்துடன் தம்முடன் இணைந்து தர்பங்காவைச் சேர்ந்த முகமது கட்டீல் சித்திக் என்பவர்தான் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது என்றும் பட்கல் கூறியுள்ளார். இந்த கட்டீல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எரவாடா சிறையில் கொல்லப்பட்டார். ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பை நிகழ்ச்சிய அதே நாளில் புனேயில் உள்ள டக்துசேத் ஹல்வாய் கணபதி கோயிலையும் தகர்க்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் பட்கல் விவரித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜெர்மன் பேக்கரி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. ஜெர்மன் பேக்கரி வழக்கில் தமக்கு தூக்கு விதிக்கப்பட்ட போது கருத்து தெரிவித்திருந்த பெய், குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட 18வது அப்பாவி நான். என்னை மகாராஷ்டிரா போலீசார் பலிகடாவாக்கிவிட்டனர் என்று குமுறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications