ஜெர்மன் பேக்கரி வழக்கு: தூக்கு விதிக்கப்பட்ட ஹிமாயத்துக்கு தொடர்பில்லை- பட்கல் திடுக் தகவல்
டெல்லி: புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தாமே பொறுப்பு என்றும் இதில் தூக்கு விதிக்கப்பட்ட ஹிமாயத் பெய்க்கு தொடர்பில்லை என்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் திடுக்கிடும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர் 5 பேர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் படு காயமடைந்தனர். இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியரான மிர்ஸா ஹிமாயத் பெய்க் கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் நேபாள எல்லையில் சிக்கிய யாசின் பட்கலிடம் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் புனே ஜெர்மன் பேக்கரி வழக்குக்கு தாமே பொறுப்பு என்றும் இதில் தூக்கு விதிக்கப்பட்ட பெய்க்குக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஃபயாஸ் காஸ்கிம, அபு ஜிண்டால் ஆகியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை பட்கல் கூறியுள்ளார்.

அத்துடன் தம்முடன் இணைந்து தர்பங்காவைச் சேர்ந்த முகமது கட்டீல் சித்திக் என்பவர்தான் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது என்றும் பட்கல் கூறியுள்ளார். இந்த கட்டீல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எரவாடா சிறையில் கொல்லப்பட்டார். ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பை நிகழ்ச்சிய அதே நாளில் புனேயில் உள்ள டக்துசேத் ஹல்வாய் கணபதி கோயிலையும் தகர்க்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் பட்கல் விவரித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜெர்மன் பேக்கரி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. ஜெர்மன் பேக்கரி வழக்கில் தமக்கு தூக்கு விதிக்கப்பட்ட போது கருத்து தெரிவித்திருந்த பெய், குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட 18வது அப்பாவி நான். என்னை மகாராஷ்டிரா போலீசார் பலிகடாவாக்கிவிட்டனர் என்று குமுறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications