தமிழகம் முழுவதும் 814 அனுமதி பெறாத குடிநீர் நிறுவனங்கள்: அக்.7 வரை கெடு
சென்னை: தமிழ்நாடு முழுவதும், 814 குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் செயல்படுகின்றன' என, பசுமைத் தீர்ப்பாயத்தில், மாசுக்கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகளை அமல்படுத்த குடிநீர் நிறுவனங்கள் அவகாகம் கேட்டதை தொடர்ந்து, அக்டோபர் 7ஆம் தேதி வரை பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.
தனியார் குடிநீர் நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர் தரமானது இல்லை என, தெரிய வந்ததால், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறது. இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து குடிநீர் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சில விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதி சொக்கலிங்கம், பேராசிரியர் நாகேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. "தமிழகத்தில் உள்ள, 967 குடிநீர் நிறுவனங்களில், 153 நிறுவனங்கள் மட்டுமே வாரிய அனுமதி பெற்றுள்ளன; 814 நிறுவனங்கள் அனுமதி பெறவில்லை. 391 நிறுவன மாதிரி பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. 499 நிறுவனங்களின் மாதிரிகளின் பரிசோதனை நடந்து வருகிறது' என, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது.
இதில், 814 நிறுவனங்கள்,அனுமதி பெறாதது குறித்து, தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. வர்த்தக ரீதியாக நிலத்தடி நீர் எடுக்க, உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளதால் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என, குடிநீர் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் நடக்கும் இது தொடர்பான வழக்கில் இணைந்து, குடிநீருக்கு தண்ணீர் எடுப்பது தொடர்பாக, விலக்கு பெறுமாறு குடிநீர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய உணவு பாதுகாப்புத் துறை சார்பில், அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதன்படி, "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்கள், முதலில் குடிநீர் உற்பத்திக்கான அனுமதி பெற வேண்டும் என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை அமல்படுத்த அவகாசம் தேவை என்று குடிநீர் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிபதி, அதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டார். உற்பத்தி, விற்பனைக்கான தடையை நீக்க மறுத்த தீர்ப்பாயம், விசாரணையை, அடுத்த மாதம், 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications