எம்.ஜி.ஆர். கோவில்: குழந்தை பாக்கியம் பெற இருமுடி கட்டி வழிபடும் பக்தர்கள்
சென்னை: குழந்தை பாக்கியம் வேண்டி அரசமரத்தை சுற்றும் பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பிள்ளை வரம் கேட்டு 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு தம்பதி சமேதராக வந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார். எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அதன் பிறகே கோவில் கட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர். இறந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கடந்த 2011-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டியிருக்கிறார் கலைவாணன்.

நிலத்தை விற்று…
கோவில் உள்பகுதியில் எம்.ஜி.ஆரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. புதுப் பேட்டையில் உள்ள தனது நிலத்தை விற்று நத்த மேட்டில் கோவில் கட்டுவதற்காக இடம் வாங்கி இருக்கிறார் கலைவாணன்.

எம்.ஜி.ஆர் பாடல்கள்
கோவிலில் எப்போதும் எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கோவில் திறந்து இருக்கும்.

சிலை ஊர்வலம்
இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

இருமுடி கட்டி வழிபாடு
எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி டிசம்பர் மாதம் முதல் 41 நாட்கள் விரதம் கடைபிடித்து எம்.ஜி.ஆர்.கோவிலுக்கு தலையில் பூஜை கட்டு சுமந்து வரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் எம்.ஜி.ஆர். சிலையை தரிசித்த பிறகே கட்டை பிரிக்க வேண்டும் என்கிறார் கலைவாணனின் மனைவி சாந்தி.

வாழ்க்கைப் பாடம்
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் எம்.ஜி.ஆர்.தான் என்று நெகிழ்கிறார் கலைவாணன்.

படையெடுக்கும் பக்தர்கள்
குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

எம்.ஜி.ஆரின் பக்தர்கள்
‘வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கு குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications