24 நாட்கள் சிறை பிடிப்புக்கு பின்னர் இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஈரான் உத்தரவு!
டெஹ்ரான்: இந்திய எண்ணெய் கப்பலை 24 நாட்கள் சிறை பிடித்து வைத்திருந்த ஈரான் இன்று அதை விடுவிக்க உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு அக்டோபர் 12-ந் தேதியன்று இந்திய அரசுக்குச் சொந்தமான எம்டி தேஷ் சாந்தி என்ற எண்ணெய் கப்பல் ஈரான் துறைமுகம் வழியாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த எண்ணெய் கப்பலை வழிமறித்த ஈரான் கடற்படை அதை தடுத்து நிறுத்தி துறைமுகத்துக்கு கொண்டு சென்றது.
தங்களது நாட்டு கடற்பரப்பை மாசுபடுத்திவிட்டது இந்திய எண்ணெய் கப்பல் மாசுபடுத்தி விட்டது என்பதுதான் ஈரானின் புகார். இதைத் தொடர்ந்து கடந்த 24 நாட்களாக பந்தார் அப்பாஸ் துறைமுகத்திலேயே இந்திய எண்ணெய் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலை விடுவிக்க பெருந்தொகையான பணம் பேரமும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க ஈரான் அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஈராக்கிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்த கோபத்தில்தான் ஈரான் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-
கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல் -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா? -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
இறங்கி வரும் ஈரான்.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் போர்? திடீரென வந்த 3 முக்கியமான கண்டிஷன்கள் -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்! -
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் அரபு நாடுகளின் கதி? உணவு மற்றும் மருந்து சப்ளையில் யாருக்கு ஆபத்து? -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications