நம்ம ஊரில் ஆசிரியர்களுக்கு இன்று மரியாதை... பிலிப்பைன்ஸிலோ 2 ஆசிரியர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
மணிலா: இன்று இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆசிரியர்களை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ப டகில் கடத்திச் சென்றது.
அந்த ஆசிரியர்களின் பெயர் பிரடெரிக் பனோட் மற்றும் சேர்தென் மாசோங் என்பதாகும். இவர்கள் இருவரும் பசிலன் தீவில் உள்ள அரசு சாரா குழந்தைகள் அறக்கட்டளை நிறுவனப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்துக் கடத்தியது. பின்னர் தயாராக இருந்த ஒரு மோட்டார் படகில் ஏற்றிக் கொண்டு போய் விட்டது.
கடத்தியவர்கள் யார், ஆசிரியர்களை எதற்காக கடத்தினர், எங்கு கொண்டு சென்றனர், ஆசிரியர்களின் கதி என்ன என்பது தெரியவி்ல்லை.












Click it and Unblock the Notifications