ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திலிருந்து ஆபாச வீடியோ பறிமுதல்?
ஜோத்பூர்: சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு ஆபாச எம்.எம்.எஸ் வீடியோ சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆபாச வீடியோவில், ஒரு பெண்ணின் உடல் மீது தனது கைகளால் சாமியார் தடவுவது போல இருக்கிறதாம். இந்த வீடியோவை எடுத்தவர் ஆசாராமின் உதவியாளர் சிவா என்று ஆஜ்தக் செய்தி கூறுகிறது.
இந்த ஆபாசக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சிடியில் சேமித்துள்ளாராம் சிவா. ஆனால் இந்த சிடி கிடைக்கவில்லை. இந்த ஆபாச எம்எம்எஸ் அகமதாபாத்தில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் சில வீடியோ கிளிப்பிங்குகளும் கிடைத்துள்ளதாவும் ஆஜ்தக் கூறுகிறது.
இந்த ஆபாசப் படத்தை வைத்துப பார்க்கும்போது ஆசிரமத்தில் பெருமளவில் செக்ஸ் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். இதற்கிடையே, ஆசாராம் ஆசிரமத்தில் வார்டனாக வேலை பார்த்து வந்த சஞ்சிதா குப்தா என்ற பெண் தலைமறைவாக இருக்கிறார். அவர் மகாராஷ்டிராவில் மறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவர்தான் ஆசாராம் மீது புகார் கொடுத்துள்ள 16 வயது சிறுமியை, ஆசிரமத்திற்குப் போய் சிறப்பு சிகிச்சை பெறுமாறு அவரது பெற்றோருக்கு யோசனை கூறியவர் என்று கூறப்படுகிறது. சிவா தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். இவரிடம் உள்ள ஆசாராம் குறித்த ஆபாச சிடியை போலீஸார் கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனராம்.
சிவா, ஆசாராம் குறித்த பல ரகசியங்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம். இரவு நேரங்களில்தான் ஆசாராம் சேஷ்டைகளில் ஈடுபடுவாராம். இதற்காக தனியாக குடில் ஒன்றும் உள்ளதாம். அங்கு வைத்துத்தான் அத்தனையும் நடக்குமாம். தனது பெண் ஆதரவாளர்கள், சிஷ்யைகளுக்கு ஆபாசப் படம் போட்டுக் காட்டி அவர்களைத் தூண்டி விடுவாராம் ஆசாராம். பின்னர் பாலியல் ரீதியாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வாராம்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போலீஸார் தெளிவுபடுத்தினால்தான் உண்டு.