மிஸ் டிவா 2013 அழகிப் போட்டி: பட்டம் வென்ற பி.இ. மாணவி மானசி
மும்பை: மும்பையில் நடந்த மிஸ் டிவா 2013 அழகிப் போட்டியில் பி.இ. மாணவி மானசி மோகே வெற்றி பெற்றுள்ளார்.
மும்பையில் உள்ள மேற்கு மும்பை கார்டன் சிட்டியில் மிஸ் டிவா 2013 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று மாலை நடந்தது. இந்த இறுதிச் சுற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 14 அழகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பட்டத்தை தட்டிச் சென்றது யார் என்று பார்ப்போம்.

மானசி மோகே
இந்தூரைச் சேர்ந்த மானசி மோகே மிஸ் டிவா 2013 பட்டத்தை தட்டிச் சென்றார். அடுத்தடுத்த இடங்களை குர்லீன் க்ரேவால் மற்றும் ஷ்ரிஷ்டி ரானா ஆகியோர் பிடித்தனர். மானசி நாக்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகிப் போட்டி
மிஸ் டிவா பட்டத்தை வென்றதால் மானசிக்கு இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பட்டங்கள்
சிறந்த உடலமைப்புக்கான பட்டத்தை ப்ரீத்தி சவுகானும், மிஸ் ரன்வே பட்டத்தை நிஷிதா ராவும், மிஸ் போட்டோஜனிக் பட்டத்தை ஜதலேகா மல்ஹோத்ராவும், கண்ணழகி பட்டத்தை யஷ்னா குரானாவும், மிஸ் டிஜிட்டல் பட்டத்தை சுஷ்ரி ஸ்ரேயா மிஸ்ராவும், மிஸ் சுடோக்கு பட்டத்தை சீப் தனேஜாவும், மிஸ் பாப்புலர் பட்டத்தை சோனிகா சவுகானும் வென்றனர்.

ஜீனத் அமன்
பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் நடுவர்களில் ஒருவராக இருந்து அழகிகளை தேர்வு செய்தார்.

ரவீனா டான்டன்
பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

மலாய்க்கா
பாலிவுட் நடிகை மலாய்க்கா ஆரோராவும் நடுவராக இருந்து அழகிகளை தேர்வு செய்தார்.












Click it and Unblock the Notifications