மோடியை பிரதமர் வேட்பாளராக இப்போது அறிவிக்காதீர்கள்.. ராஜ்நாத்திடம் ம.பி. முதல்வர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை தாமதம் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தையும் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளார் பாஜகவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.
வருகிற நவம்பர் மாதம் வரும் ம.பி. உள்ளிட்ட சில மாநில சட்டசபைத் தேர்தல்கள் வரை இந்த அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்பே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ம.பியில் பாஜகவுக்கு சிக்கல் வரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications