டி.டி. மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை: சர்ச்சைக்குரிய டி.டி மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டிடி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 103 பேர் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலரை போலீசார் தாக்கினர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அனைவரையும் கிண்டியில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்கவைத்துள்ளனர்.
இதனிடையே மாணவர்களை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
அறவழியில் போராடிய மாணவர்களை கைது செய்து சிறை வைத்துள்ளனர். இவர்களை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கைது செய்துள்ளதாக மாநகர ஆணையாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
103 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கருணை அடிப்படையில் அவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் அளிக்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைகழகம் போல டிடி மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்தார்.
டிடி மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்காததால், 103 மாணவர்களும் இரண்டாமாண்டு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலமே கேள்விக்குறியான மாணவ, மாணவிகள், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications