ஓணம் பண்டிகை: தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை படுஜோர்
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று தொடங்குகிறது. அத்தப்பூ கோலமிடுதலுக்காக கேரள வியாபாரிகள் குவிவதால் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட துவங்கியுள்ளது. பூக்களில் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை பத்துநாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை அத்தம் பத்தினு பொன்னோணம் என்று கேரள மகிழ்ச்சியாக கூறுவார்கள்.
கேரள மற்றும் குமரி மாவட்ட மக்கள் வசந்த கால விழாவாக ஒணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். செப்டம்பர் 16-ஆம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.

அத்தப்பூ கோலம்
இந்த பத்து நாட்களும் விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு வீட்டினை அலங்கரக்கின்றனர். திருவோண நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவு பாதர்த்தங்களுடன் உற்சகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகு போட்டி, போன்ற பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

மகாபலி மன்னன்
மலையாள நாட்டை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி மக்களை ஓணத் திருநாளில் காண வருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தங்களை காணவரும் மன்னனை வரவேற்க அத்தப்பூ கோலமிடுகின்றனர் மலையாள மக்கள்

விதவிமான பூக்கோளம்
அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நாட்களும் 10 களம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதல் களத்தில் விநாயகர், 2-வது களத்தில் சக்தி, 3-வதில் சிவன், 4-வதில் பிரம்மா, 5-வதில் பஞ்ச பூதங்கள், 6-வதில் முருகன், 7-வதில் குரு, எட்டாவதில் அஷ்டதிக் பாலகர், ஒன்பதாவதில் இந்திரன், பத்தாவதில் விஷ்ணு. இவ்வாறு 10 களங்களிலும் இறை வடிவங்கள் பிரதிஷ்டிக்கப்பட்டு இம்மக்கள் வழிபடுகின்றனர்.

தோவாளை பூ சந்தையில்
ஓணப் பண்டிகையினை முன்னிட்டு அத்தப்பூ கோலமிடுதலுக்காக கேரள வியாபாரிகள் குவிவதால் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட துவங்கியுள்ளது. மல்லிகை, சிவந்தி, கிரேந்தி, பிச்சி, கனகாம்பரம், வாடாமல்லி, அரளி, ரோஜா, சம்பங்கி, கோழிபூ, தாமரை, தாழம்பூ உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் இங்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன. இப்பூக்களே கேரளாவின் மலர் திருவிழாவிற்கு மணம் சேர்க்கின்றன.

விலை அதிகம்
ஓணம் பண்டிகையோடு திங்களன்று விநாயகர் சதுர்த்தி விழாவும் கொண்டாடப்படுவதால் பிச்சி, மல்லி, அரளி, செவ்வந்தி, வாடாமல்லி, சம்பங்கி, ரோஜா, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களில் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications