பிறந்து 1 மாசம்தான் ஆகிறது.. பச்சிளம் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை.. உடனே உதவுங்களேன்
பிறந்து நான்கு வாரமே ஆன பச்சிளம் குழந்தை, இதயத்தில் பிரச்சனை காரணமாக உயிர் வாழ உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உங்களால் முடிந்த உதவியை குழந்தைக்கு அளியுங்கள்.
நீங்கள் படத்தில் பார்க்கும் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து தனது வாழ்க்கையின் 1 மாதத்தை மட்டுமே இது வரை வாழ்ந்துள்ளது. குழந்தை தொடர்ந்து சோர்வாக உள்ளது. அத்துடன் சுவாச பிரச்சனைகளை அனுபவிக்கிறது. சுறுசுறுப்பாக சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் குழந்தை அடிக்கடி சோர்வடைகிறது.
பச்சிளம் குழந்தையான சிறுவனுக்கு இதயத்தில் இரண்டு துளைகள் உள்ளது என் அவரது தந்தை ராஜேஷ் கண்ணீருடன் தெரிவித்தார், ராஜேஷ் மற்றும் சரஸ்வதி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இரண்டாவது குழந்தை முது அதீத அக்கறையுடன் இருந்தார்கள். அவர்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்குழந்தை என இரட்டைக் குழந்தை பிறந்தது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் சரஸ்வதி தம்பதி தங்கள் குழந்தைகளின் உடல்நலம் குறித்து மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். இரட்டை குழந்தையில் ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்கு எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. இதய தசைகள் பலவீனமடைவது தெரிந்தது. உடலில் ஆக்ஸிஜன் குறைவதற்கு இது பெரிய காரணமாக மாறியது. பிறந்த 1 மாதத்திலேயே அந்த ஆண் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. குழந்தையின் இதயம் மற்றும் நுரையீரல் எப்போது வேண்டுமானாலும் செயல் இழக்கும் நிலை உள்ளது.
குழந்தையின் இதய நோய் பற்றிய செய்தி அவரது தாய்க்கு சென்ற போது அவர் உடைந்து கதறி அழுதார். கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்., குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார். விவசாயியான ராஜேஷ் விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்.
குழந்தை தற்போது மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.. குடும்பம் தங்கள் 1 மாத குழந்தையை இதயக் கோளாறால் இழக்கும் அபாயத்தில் உள்ளது. குழந்தை நீண்ட காலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அறுவை சிகிச்சை அவசியம் என்கிறார்கள். உங்களால் முடிந்த உதவியை அளியுங்கள்.
RECOMMENDED STORIES