பெற்றோர்களே உஷார்.. பப்ஜி கேமில் தோல்வி.. நண்பர்கள் கிண்டல் செய்ததற்காக உயிரை விட்ட மாணவன்!
கிருஷ்ணா : பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை, சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் அந்தச் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் பிரபு,
தினமும் நண்பர்களுடன் சேர்ந்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடியபோது தோல்வியடைந்ததால் அவரது நண்பர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திரா
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி ராஜ், கௌரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பப்ஜி விளையாட்டு
லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16). தனது தந்தையுடன் சித்தி வீடான மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் கேமை விளையாடி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.

கேலி செய்த நண்பர்கள்
நண்பர்கள் அதிகமாக கேலி செய்ததால் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மம்
இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கௌரி மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரணங்கள்
முன்னதாக கடந்த வாரம், லக்னோவில், 16 வயது சிறுவன், பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களை விளையாட விடாமல் தடுத்ததால், ராணுவத்தில் இருக்கும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது தாயை சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் உயிரைப் பறிப்பதால் அரசு அந்த விளையாட்டுகளை கடுமையாக தடை செய்து, யாருமே விளையாடதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications