ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி! அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானுடன் தீவிர ஆலோசனை
அபுதாபி: ஜெர்மனியில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற நிலையில் அவர் அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானுடன் இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசித்தார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தர்.
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் 2 நாள் ஜி7 உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. ஜி7 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த உச்சி மாநாட்டு பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார். இதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார்.

ஜெர்மனிக்கு 2 நாள் பயணம்
நேற்று முன்தினம் ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு முனிச் நகரில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதையடுத்து நேற்று ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளில் அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேறார்.

உலக தலைவர்களுடன் சந்திப்பு
ஜி7 நாட்டு தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல், தென்ஆப்பிரிக்கா, உக்ரைன் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி பேசினார். மேலும் எரிசக்தி துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம் தொடர்பாக தலைவர்கள் விவாதித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மோடி
இந்நிலையில் ஜெர்மனியில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். இந்தியா வரும் வழியில் திட்டமிட்டப்படி அவர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் , பிரதமர் மோடியை வரவேற்றார்.

ஆலோசனை- இரங்கல்
இதையடுத்து இருநாட்டு தலைவர்களும் இருநாடுகள் இடையேயான உறவுகள், தொழில் வர்த்தகங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலிபா கடந்த மே 13 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரித்தது. ஷேக் கலிபா இந்தியாவுடன் நல்லுறவை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications