திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்னும் சூடு பிடித்தபடியே உள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய்யின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலுவான ஆட்சியை நடத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, திமுகவினர் தவெகவில் இணைய முயற்சி எடுப்பதை முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக நிராகரித்துள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 CM Vijay TVK DMK leaders rejected Tamil Nadu politics Edappadi Palaniswami Udhayanidhi Stalin vijay political strategy

தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த நம்பிக்கை கோரும் தீர்மான வாக்கெடுப்பு தமிழக அரசியலை உலுக்கியது. அதன் தொடர்ச்சியாக மதுராந்தகம் மாரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இன்னும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக தலைமைக்கு விருப்பக் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டல கோட்டையிலிருந்தே இந்த வெளியேற்றம் நிகழ்வது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுகவிலும் பெரும் அசௌகரியம் நிலவுகிறது. 59 இடங்களுடன் தோல்வியைத் தழுவிய திமுக இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும், கட்சிக்குள் சீனியர்-ஜூனியர் இடையே புகைச்சல் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில் சில திமுக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவெகவில் இணைய ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவினர் இணைய திட்டம்

ஆனால் முதலமைச்சர் விஜய் இந்த முயற்சிக்கு கடுமையான 'நோ' சொல்லியுள்ளார். உளவுத்துறை மூலம் இந்த தகவலை அறிந்த அவர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். "திமுகவினரை எந்தக் காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது" என கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "அதிமுகவினர் மக்கள் அதிருப்தியால் வருகின்றனர். ஆனால் திமுகவினரைச் சேர்ப்பது நமது 'தூய்மையான அரசியல்' பிம்பத்தை கெடுக்கும்" என விஜய் தெரிவித்ததாக உள்ளார்கள்.
இந்த உத்தரவுக்குப் பிறகு தவெக அமைச்சர்களும் நிர்வாகிகளும் திமுகவினரின் அழைப்புகளைத் தவிர்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த திமுக பிரமுகர்கள் பலரும் தொடர்பு கொள்ள முயன்றும், போன்கள் "சுவிட்ச் ஆஃப்" நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

அரசியல் விமர்சகர்கள் இந்த முடிவின் பின்னணியில் இரு முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். முதலாவது, தவெகவின் 'தூய்மை அரசியல்' மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை பாதுகாத்தல். இரண்டாவது, ஏற்கனவே தவெகவில் உழைத்த பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உள் பூசலைத் தவிர்த்தல்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அரசியல் காய்நகர்த்தல் அதிமுகவை முழுமையாக பலவீனப்படுத்தி, திமுகவுக்கு மாற்றாக தவெகவை ஒரே சக்தியாக நிலைநிறுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் ஒரே நேரத்தில் ஆட்டம் காணும் அரிய காட்சி இப்போது அரங்கேறியுள்ளது.

தவெகவின் இந்த உறுதியான நிலைப்பாடு 2026க்குப் பிந்தைய தமிழக அரசியலை புதிய பாதையில் கொண்டு செல்லும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மக்கள் மத்தியில் 'தூய்மை' என்ற பிம்பத்தை வலுப்படுத்தும் விஜய்யின் முடிவு, எதிர்காலக் கூட்டணி அரசியலுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+