கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு!
அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்: அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 20 நிமிட போராட்டத்திற்கு பின் 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து தற்போது தமிழ்கத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும் கூட மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மிகவும் சிறியது ஆகும்.
25 பேர் செல்ல வேண்டிய படகில் கூடுதலாக 5 பேர் சென்றுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது இந்த படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 30 பேரில், 10 பேர் நீரில் மூழ்கி மாயமானார்கள். இவர்களின் நிலை என்ன ஆனது என்று முதலில் தெரியவில்லை.
இதில் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அதன்பின் தண்ணீர் மூழ்கிய 10 பேரை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மக்கள் மீட்டனர். 20 நிமிடம் போராடி இந்த 10 பேரும் மீட்கப்பட்டனர்.
அதன்படி தற்போது படகில் சென்ற 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications