கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு!
அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்: அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 20 நிமிட போராட்டத்திற்கு பின் 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து தற்போது தமிழ்கத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும் கூட மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மிகவும் சிறியது ஆகும்.
25 பேர் செல்ல வேண்டிய படகில் கூடுதலாக 5 பேர் சென்றுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது இந்த படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 30 பேரில், 10 பேர் நீரில் மூழ்கி மாயமானார்கள். இவர்களின் நிலை என்ன ஆனது என்று முதலில் தெரியவில்லை.
இதில் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அதன்பின் தண்ணீர் மூழ்கிய 10 பேரை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மக்கள் மீட்டனர். 20 நிமிடம் போராடி இந்த 10 பேரும் மீட்கப்பட்டனர்.
அதன்படி தற்போது படகில் சென்ற 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications