கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு!
அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்: அரியலூரில் நடந்த படகு விபத்தில் கொள்ளிடம் ஆற்றில் 30 பேர் மூழ்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 20 நிமிட போராட்டத்திற்கு பின் 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து தற்போது தமிழ்கத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும் கூட மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு படகில் 30 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மிகவும் சிறியது ஆகும்.
25 பேர் செல்ல வேண்டிய படகில் கூடுதலாக 5 பேர் சென்றுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது இந்த படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த 30 பேரில், 10 பேர் நீரில் மூழ்கி மாயமானார்கள். இவர்களின் நிலை என்ன ஆனது என்று முதலில் தெரியவில்லை.
இதில் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அதன்பின் தண்ணீர் மூழ்கிய 10 பேரை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மக்கள் மீட்டனர். 20 நிமிடம் போராடி இந்த 10 பேரும் மீட்கப்பட்டனர்.
அதன்படி தற்போது படகில் சென்ற 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக மீட்கப்பட்ட 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications