மனைவியை அடித்து கொன்ற கணவன்... விஷம் குடித்துவிட்டு வீடியோ ரீலிஸ் செய்ததால் பரபரப்பு
Recommended Video

அரியலூர் : பட்டபகலில் மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே உள்ள என்ற சன்னாமூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன். அவரது மனைவி சுகன்யா. அவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தமது மனைவி சுகன்யாவின் நடத்தையில் மணிகண்டன் சந்தேகப்பட இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வயலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி மனைவி சுகன்யாவை மணிகண்டன் அழைத்து சென்றுள்ளார். அப்போது தமது வயலில் சுகன்யாவை எதிர்பாராத வகையில் மணிகண்டன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
படுகாயமடைந்த சுகன்யா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனால் பயந்து போன மணிகண்டன் ஒரு கட்டத்தில் வயலில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு வெங்கனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீசில் சரணடையும் முன்பாக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த மணிகண்டன், கொலை நடந்தது எப்படி? அதற்கு யார் காரணம் என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, போலீசார் மணிகண்டனை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications