காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது.. 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு .. பதற்றம்
அரியலூர்: பாமக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவராகவும், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ குரு. அவரது மறைவிற்கு பின் குருவின் மகன் கனலரசன் 'மாவீரன் மஞ்சள் படை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும், கனலரசன் நடத்தி வரும் 'மாவீரன் மஞ்சள் படை'யினருக்கும் மோதல் இருந்து வந்தது.

கொடி ஏற்ற முயற்சி
இந்நிலையில அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற தனது அமைப்பின் கொடியினை ஏற்ற தனது ஆதரவாளர்களுடன் ஜெயங்கொண்டம் வந்தார். அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்தாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டத்தில் சிறை வைக்கப்பட்டார்.

பாமக புகார்
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மாவீரன் மஞ்சள் படை அமைப்பினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் ஏற்பட்ட தகராறில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புகார் கொடுத்திருந்தனர்.

காடுவெட்டி குரு மகன்
இந்த புகாரின் பேரில் மாவீரன் மஞ்சள் படை தலைவரும் காடுவெட்டி குருவின் மகனுமான கனலரசன் ஜெயங்கொண்டத்தில் இன்று கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கனலரசனை செந்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பலத்த பாதுகாப்பு
இதையடுதது சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். காடுவெட்டி குருவின் மகன் கைது செய்யப்பட்டதால் செந்துறை நகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்- இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications