கங்கை நீரில் அபிஷேகம்.. மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்த பிரதமர் மோடி!
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தனது தொகுதியான வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரால் கோயிலில் அபிஷேகம் செய்து, சில நிமிடங்கள் பிரதமர் தியானத்தில் ஆழ்ந்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து திருச்சி வந்த அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்திருக்கிறார்.

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், அவரது தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கோவிலின் கட்டுமானத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அபிஷேகத்திற்கு தான் கொண்டு வந்த கங்கை நீரை கொடுத்தார். இதனையடுத்து கோயிலில் சில நிமிடங்கள் தியானத்தில் பிரதமர் ஆழ்ந்தார். பின்னர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமரின் கங்கைகொண்ட சோழபுரம் பயணம் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications