ஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்!
அரியலூர்: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் டீக்கடையின் மேற்கூரை சரிந்து எண்ணெய் சட்டிக்குள் விழுந்ததில் எண்ணெய் தெறித்து ஊழியர் படுகாயமடைந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்திலுள்ள முதல் கடையில் டீ கடை செயல்பட்டு வருகிறது.
இந்த டீக்கடை எப்பொழுதும் பயணிகள் நிற்கும் இடமாக பரபரப்பாக காணப்படும். இந்தக் கடையில் மாஸ்டராக பணிபுரிபவர் கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த குருநாதன். இவர் இன்று கடையில் உள்ளே வடை, பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்.

சிமென்ட் காரைகள்
அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பொலபொலவென பெயர்ந்து விழுந்தன. இதில் காரைகள் சூடாக இருந்த எண்ணெய் சட்டியில் விழுந்ததில் என்னை பல திசைகளில் தெறித்து குருநாதன் மீதும் விழுந்தது.

கொதிக்கும் எண்ணெய்
மேலும் மேலே இருந்து சிமெண்ட் காரைகள் விழுந்தன. இதில் எண்ணெய் உடல் மேல்பட்டு காயம் ஏற்பட்டதோடு சிமென்ட் காரை விழுந்ததில் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு குருநாதன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பேருந்து நிலையம்
இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது. சில வருடங்களுக்கு முன்பாக இதே கடையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது யாரும் உள்ளே இல்லாததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.

பயணிகள் கோரிக்கை
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து கடைகளிலும் சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும். உயிர் பலி வாங்கும் முன் இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications