பானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு
அரியலூர்: சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று மதியம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் பானையை தெருவில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதை பார்த்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், பானையை உடைத்த கட்சியினரை தாக்கியுள்ளனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் அந்த கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications