தமிழக எம்எல்ஏக்களிலேயே மிகவும் சுறுசுறுப்பானவர் உதயநிதி.. அதனால்தான் அமைச்சர் பதவி! சிவசங்கர் பேச்சு
அரியலூர் : எம்எல்ஏக்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதியன்று தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது பற்றி எதிர்க்கட்சியினர் 'வாரிசு அரசியல்' என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான செயல்பாட்டுக்காகவே அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதாக திமுக அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

அன்பழகன் நூற்றாண்டு விழா
அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக சார்பில் மறைந்த முன்னாள் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்றார். இந்தப் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சிவ.மாணிக்கம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ரா.முருகேசன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

எளிமையான தலைவர்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "திராவிட சித்தாந்தத்தை நமக்கு அளித்த பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை விழாவாக கொண்டாட கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும் 100 இடங்களில் அன்பழகன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் இரண்டாம் நிலை தலைவராக இருந்தபோது கூட எளிமையாக இருந்தவர் அன்பழகன். அனைவரிடத்திலும் அன்புடன் பழகக்கூடியவர்." என புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
மேலும் பேசிய அவர், "இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மு.க.ஸ்டாலின் மட்டுமே தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களுக்காகவும் போராடி வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு தொடுத்த அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவரும் மு.க.ஸ்டாலின் தான்" என்றார்.

எம்.எல்.ஏக்களில் சுறுசுறுப்பானவர்
மேலும், "ஜனநாயகத்தின் குரல் வலை நெரிக்கப்படுகிறது. இது நாளை நமது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தான் குரல் கொடுத்தார். அரியலூருக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட புதிய அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக எம்எல்ஏக்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடு போகப்போக அனைவருக்கும் தெரியவரும்" எனப் பேசினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications