பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. இன்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பெங்களூர் அணியின் வீரர்களுக்கு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அன்றைய தினத்தன்று மாலை 5 மணிக்கு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விராட் கோலி, ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்கள் விதான சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாக அந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூர் கிரிக்கெட் அணியைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு கிரிக்கெட் வீரர்களை காணச் செல்ல முயன்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் அங்கு குவிந்ததால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையடுத்து, பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் பெங்களூரு காவல் ஆணையரான தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஸ்குமார், துணை காவல் ஆணையரான சேகர் ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தகவல் தெரிவித்திருந்தனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று மத்திய அரசிடம், கர்நாடகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications