பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. இன்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. பெங்களூர் அணியின் வீரர்களுக்கு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அன்றைய தினத்தன்று மாலை 5 மணிக்கு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விராட் கோலி, ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்கள் விதான சவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாக அந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூர் கிரிக்கெட் அணியைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு கிரிக்கெட் வீரர்களை காணச் செல்ல முயன்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் அங்கு குவிந்ததால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையடுத்து, பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் பெங்களூரு காவல் ஆணையரான தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஸ்குமார், துணை காவல் ஆணையரான சேகர் ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தகவல் தெரிவித்திருந்தனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று மத்திய அரசிடம், கர்நாடகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications