பெண்களின் உள்ளாடையை திருடி அணிந்த இளைஞர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த பெங்களூர் போலீஸ்.. ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் வீடு புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்து செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் பெண்களின் உள்ளாடைகளை அணிந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரின் ஹெப்பகோடியில் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழையும் நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடுவதும், அதனை அணிந்து செல்போனில் வீடியோ எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தது.

இந்த நபரின் இந்த செயல் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இதுதொடர்பாக போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது கைதான நபரின் பெயர் அமுல் (வயது 23). கேரளாவை சேர்ந்த இவர் பெங்களூர் ஹேப்பகோடியில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவருக்கு பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பெண்களின் உள்ளாடையை அணிந்தால் தனக்கு ஒருவிதமான போதை ஏற்படுவதை உணர்வதாகவும், இதனால் தொடர்ந்து அதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் இரவு நேரங்களில் வீட்டின் பால்கனி மற்றும் முற்றத்தில் உலர வைக்கப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து பெண்களின் உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக ஹெப்பகோடி போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 303 (2) (திருட்டு), 329 (4)(வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 79 (வார்த்தை, சைகை அல்லது அத்துமீறி நுழைந்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கர்நாடகாவில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 25 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், மாணவிகளின் உள்ளாடைகளை திருடிய வழக்கில் துமகூரு போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் பல வீடுகளில் பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. மேலும் அவர், ஆபாசபடம் பார்ப்பதற்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications