பெங்களூர் புத்தக திருவிழாவில் இன்று.. மேஜிக் ஷோ, நூலரங்கம், பாவரங்கம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் 3-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழா, 5வது நாளான இன்று பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் தொடங்கியுள்ளது.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
- மாயவித்தைக் காட்சி: காலை 1:00 மணி முதல் 3:00 மணி வரை, "மந்திரமல்ல தந்திரம் தான்" என்ற தலைப்பில் மாயவித்தைக் காட்சி வெற்றி அரங்கில் நடைபெறுகிறது.
- பொதுமக்களுக்கான பரிசளிப்பு விழா: மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். திருமதி. பா.கிருஷ்ணவேணி வரவேற்புரை ஆற்ற உள்ளார்.
- நூலரங்கம்: மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை, கவிஞர் மா.வித்யா எழுதிய "நோற்றலின் ஆற்றல்" நூல் குறித்து திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கவிஞர் அகவி தலைமை தாங்க உள்ளார்.
- பாவரங்கம்: மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, "தமிழைத் தருவோம் தலைமுறைக்கு!" என்ற தலைப்பில் பாவரங்கம் கூட்டம் நடைபெற உள்ளது. கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில், பல்வேறு பாவலர்கள் கலந்து கொண்டு தங்கள் பாடல்களை நிகழ்த்த உள்ளனர்.
- எங்கே நடக்கிறது: குயின்ஸ் ரோட்டிலுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங்கின் எதிர்ப்புறத்தின், institution of engineers வளாகத்தில் புத்தக திருவிழா இன்று 5வது நாளாக நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலை உள்ளது. தமிழ், ஆங்கிலம், கன்னடம் மொழியில் புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications